கனமழை காரணமாக கோதையாற்றில் நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுவதால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாகவும், தமிழக கடலோர பகுதிகளில் உருவாகி உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் கோதையாற்றில் நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. இதன் காரணமாக, திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், அருவியின் மெயின் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற பகுதிகளில் பாதுகாப்புடன் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.