குமாரபாளையம் அருகே கெட்டுப்போன திண்பண்டங்களை விற்பனை செய்த தனியார் பேக்கரிக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அபாரதம் விதித்து சீல்வைத்தனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள குளத்துக்காடு பகுதியில் இயங்கி வரும் தனியார் பேக்கரியில், அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞரான செல்வக்குமார் என்பவர் தனது குழந்தைகளுக்கு ஸ்வீட் பப்ஸ் வாங்கி சென்றுள்ளார்.
அதனைச் சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஸ்வீட் பப்ஸை பிரித்துப் பார்த்தபோது அது கெட்டுப்போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த செல்வக்குமார், தனது நண்பர்களுடன் சென்று பேக்கரி ரிமையாளரிடம் கேட்டுள்ளார்.
இந்த ஸ்வீட் பப்ஸ் இங்கே வாங்கவில்லை என உரிமையாளர் கூறியதால் அதிர்ச்சியடைந்த செல்வகுமார், கடையில் இருந்த ஸ்வீட் பப்ஸ்களை ஆய்வு செய்தபோது அவை அனைத்தும் கெட்டுப்போனது தெரியவந்தது.
இது குறித்துத் தகவலறிந்து வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ஸ்வீட் பப்ஸ்களின் மாதிரிகளைப் பரிசோதனைக்காக எடுத்துக் கொண்டு, பேக்கரியை பூட்டி அபராதம் விதித்தனர்.