இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் அருகே ரிஷோன் லெசியன் பகுதியில் குடியிருப்புகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே 2-வது நாளாக தொடர் ஏவுகணை தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் அருகே ரிஷோன் லெசியன் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.