உத்தரகாண்டில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து கேதார்நாத் நோக்கிச் சென்ற பயணிகள் ஹெலிகாப்டர், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கௌரிகுந்த் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.
மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளான நிலையில், அதில் பயணம் செய்த ஒரு குழந்தை உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், சம்பவ இடத்தில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.