மங்களூருவில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
குறிப்பாக மங்களூருவில் உள்ள பம்ப்வெல் பகுதி முற்றிலுமாக மழை நீரில் மூழ்கியதால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீரைக் கடந்து செல்ல முயன்ற தனியார் பேருந்தும், ஆம்புலன்ஸ் வாகனமும் பாதியில் பழுதாகி நின்றது. பின்னர் பொதுமக்கள் உதவியுடன் இரு வாகனங்களும் சாலையோரம் நிறுத்தப்பட்டது.