தன் மீது கோபம் இருந்தால் தனது தந்தை ராமதாஸ் தன்னை மன்னிக்க வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஒண்டிக்குப்பதில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசியவர்,
என் மீது கோபம் இருந்தால் என்னை மன்னிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சமூக நீதி என்பதே தெரியவில்லை என்று அன்புமணி குற்றம் சாட்டினார்.
வரும் தேர்தலில் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி நடக்கும் என்றும் திமுக ஆட்சியின் முடிவுக்கு கவுன்டவுன் தொடங்கி விட்டது என்றும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்று அன்புமணி தெரிவித்தார்.