தேனியில் தகராறின்போது கீழே விழுந்த நபர், அரசுப் பேருந்து சக்கரம் ஏறி உயிரிழந்தார்.
புதிய பேருந்து நிலையத்தில் கார்த்திக் ராஜா என்ற இளைஞர் மதுபோதையில் முதியவர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் கைகலப்பு ஏற்பட்ட நிலையில் கார்த்திக் ராஜா அடித்ததில் முதியவர் கீழே விழுந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து அவரின் தலையில் ஏறி இறங்கியது. இதில், முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் தப்பியோட முயன்ற கார்த்திக் ராஜாவைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.