ஆர்.எஸ்.எஸ் மற்றும் எச்.எஸ்.எஸ் இணைந்து நடத்திய ரத்ததான முகாமை பாராட்டி நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பு சான்றிதழ் வழங்கி உள்ளது.
உலக ரத்த தான தினத்தையொட்டி சென்னை சேத்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் எச்.எஸ்.எஸ் இணைந்து நடத்திய ரத்த தான முகாம் நடைபெற்றது.
இதில் 2 ஆயிரத்து 750 தன்னார்வலர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். அது மட்டுமின்றி 34 வெவ்வேறு இடங்களிலும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
இதனைப் பாராட்டி நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பு பதிவு செய்து சான்றிதழ் வழங்கியது. மேலும் இந்நிகழ்வில் ஆண்டுக்கு நான்கு முறை ரத்த தானம் செய்த தன்னார்வலர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக அவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.