அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பைக் கொலை செய்ய ஈரான் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய பெஞ்சமின் நெதன்யாகு, முதல் எதிரியாக நரம்புக்கு ஈரான் இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், அவர் ஒரு நல்ல தலைவர் என்றும், மற்றவர்கள் அவர்களுடன் பேரம் பேச முயற்சிப்பதை அவர் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் கூறியுள்ளார்.
ஈரானின் அணு ஆயுத திட்டத்துக்கு அச்சுறுத்தலாக டிரம்ப் இருப்பார் என்பதால் அவரை கொல்ல ஈரான் திட்டமிட்டுள்ளதாகவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், ஈரான் உலகிற்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தலை அகற்றத் தேவையான அனைத்தையும் செய்ய இஸ்ரேல் நாடு தயாராக உள்ளதாக பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.