முதலமைச்சரின் நிகழ்ச்சிக்காக அரசு பேருந்துகள் அனைத்தும் தஞ்சைக்கு கொண்டு செல்லப்பட்டதால் பேருந்துகள் இன்றி பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
தஞ்சாவூரில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். தஞ்சாவூரில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்த விழாவிற்காக அரசு பேருந்துகளில் கட்சி கொடியை கட்டி திமுக நிர்வாகிகள் பொதுமக்களை அழைத்து சென்றனர்.
இதனால், பட்டுக்கோட்டை, திருவையாறு, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு பேருந்துகள் இல்லாமல் பள்ளி கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் அவதிக்கு ஆளாகினர். மேலும், பேருந்து நிலையங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.