12ஆவது உலக தமிழ் பொருளாதார மாநாட்டின் இணையதளம் மற்றும் சிற்றேடு வெளியீட்டு விழா நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நாசர், வி.ஐ.டி. வேந்தர் ஜி.விஸ்வநாதன், உலக தமிழ் பொருளாதார அறக்கட்டளை தலைவர் வி.ஆர்.எஸ். சம்பத் மற்றும் பல்வேறு தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நாசர், ததமிழர்கள் அனைத்து துறையிலும் வல்லுநர்களாக விளங்குவதாகக் கூறினார். தமிழர்களிடம் அனைத்து தகுதிகளும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.