குன்னூர் மார்க்கெட்டில் 872 கடைகளை காலி செய்யுமாறு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பப்ப்ட்டுள்ளதற்கு மத்திய அமைச்சல் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், நீலகிரி மாவட்டம் குன்னூரில் மார்க்கெட் பகுதியில் 872 கடைகனை காலி செய்யுமாறு நகராட்சி நிர்வாகம் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், நோட்டீஸ் வழங்கிய கையோடு நகராட்சி அதிகாரிகள் கடைகளை காலி செய்ய வியாபாரிகளை வற்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குன்னூரில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் எந்தவித பாதுகாப்பும் இல்லாத, வனவிலங்குகள் அதிகம் நடமாடும் பகுதியில் மாற்று இடம் ஒதுக்கியுள்ளனர் என்றும்,
இதனால் அப்பாவி வியாபாரிகள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
இதன் மூலம நேரடியாகவும் மறைமுகமாகவும் 2000 குடும்பங்களுக்கு மேல் பாதிக்ப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
குன்னூர் நகராட்சி பகுதியில் உள்ள கடைகளை காலி செய்ய வேண்டும் என திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றது பெரும் முயற்சி செய்து வருவதாகவும், 2 ஆண்டுகளுக்கு முன்பே வியாபாரிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி திமுக அரசு நகராட்சிக் கடைகளுக்கு பலமடங்கு வாடகைகளை உயர்த்தியதாகவும் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.