தமிழக அரசுப்பள்ளிகள் சீரழிந்து கிடக்க, சத்துணவிலும் ஊழல் செய்து படிக்கும் பிள்ளைகள் வயிற்றில் அடிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
இது தான் திராவிட மாடலா முதல்வர் ஸ்டாலின் அவர்களே? “தனி மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று பாடிய பாரதி பிறந்த மண்ணில், இன்று “சத்துணவில் புழு நெளிவதால் உண்ண முடியவில்லை” என ஒரு ஏழை வீட்டுக் குழந்தை மழலை மொழியில் புலம்புவது மனதை உலுக்குகிறது என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே அடிப்படை வசதிகள் இல்லாமை, ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு அவலங்களால் தமிழக அரசுப்பள்ளிகள் சீரழிந்து கிடக்க, சத்துணவிலும் ஊழல் செய்து படிக்கும் பிள்ளைகளின் வயிற்றில் அடிப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.