டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார மையத்தை முதலமைச்சர் ரேகா குப்தா திறந்து வைத்தார்.
டெல்லி முழுவதும் 33 இடங்களில் சுகாதார மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதனை முதலமைச்சர் ரேகா குப்தா மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். அப்போது பேசிய அவர் மக்களுக்கு இலவச மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக மையங்கள் திறக்கப்பட்டதாக தெரிவித்தார்.