ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாமை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்னைகள் தொடர்பாக இருநாடுகளிடையே ஒத்துழைப்பை மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு, மெக்சிகோ முழு ஆதரவளித்ததற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இந்நிலையில், இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக பொறுப்பேற்றுள்ள கிளாடியா ஷீன்பாமுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.