கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் ஊருக்குள் புகுந்த கடல் நீரால் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து, எர்ணாகுளம் மாவட்டத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால், கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில், செல்லானம் மீனவ கிராமத்தில் கடல்நீர் புகுந்ததால் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வீடுகள் கடல் நீரால் மூழ்கியுள்ள நிலையில், வீட்டில் இருந்த பொருட்களும் சேதமடைந்தன. இதேபோல், கண்ணமாலி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை கடல் நீர் சூழ்ந்துள்ளது. இதனால், மக்கள் வேறு இடங்களுக்கும் இடம் பெயர்ந்துள்ளனர்.
இதனிடையே, கண்ணமாலியில் உள்ள ஃபோர்ட் கொச்சி – ஆலப்புழா மாநில நெடுஞ்சாலையில் படகுகளை நிறுத்தி மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடல்நீர் ஊருக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து நடந்த மறியல் போராட்டத்தால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.