மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த தவறான தகவல்கள் பரப்புவதை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையானது வரும் 2026 ஆம் ஆண்டு முதற் கட்ட பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மத்திய அரசு பலமுறை உறுதியளித்தும், திமுக தலைவர்கள் மக்களிடையே தொடர்ந்து தவறான பொய் பரப்புரைகளைப் பரப்புவது ஏற்புடையதல்ல.
மதுரை எய்ம்ஸ் கட்டிடப்பணிகள் குறித்த காணொளியை இந்தப் பதிவுடன் இணைத்துள்ளதோடு, முதல்வர் ஸ்டாலின் விரும்பினால் அவரை நேரில் அழைத்து சென்று காண்பிக்கவும் தயாராக உள்ளேன்.
ஆகவே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த தவறான தகவல்கள் மூலம் தமிழக மக்களைக் குழப்பி அதில் அரசியல் ஆதாயம் தேடுவதை திமுக-வினர் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.