கேரள மாநிலம் கோட்டயம் அருகே ஹோட்டல் முன்பு நிறுத்தப்பட்டிருந்த அரசு சொகுசு பேருந்து பின்னோக்கி சென்று விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சூரில் இருந்து திருவனந்தபுரத்திற்குச் சென்ற அரசு சொகுசு பேருந்து, பயணிகள் இரவு உணவு சாப்பிடுவதற்காக கோட்டயம்-குருவிலங்காடு சாலையில் ஹோட்டல் முன்பு நிறுத்தப்பட்டது. பயணிகள் இறங்கிய நிலையில், அரசு பேருந்து பின்னோக்கி சென்றுள்ளது.
இதனை கவனித்த பேருந்தின் உள்ளே இருந்த பயணி, பிரேக்கை பிடித்து நிறுத்த முயன்றுள்ளார். ஆனால், பின்னோக்கி சென்ற பேருந்து ஹோட்டலின் பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஒரு பயணி தலையில் காயத்துடன் உயிர் தப்பிய நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.