கோவை சின்னியம்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவிலில், நேற்று இநூற்றாண்டு கால பழமையான சிலைகளை சேதப்படுத்தப்பட்டதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு பிளேக் மாரியம்மன் திருக்கோவில் சிலைகளை சில மர்ம நபர்கள் சேதப்படுத்திச் சென்றிருப்பது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் இந்துக் கோவில்களுக்கான பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக் குறியாகி வருவது ஏன்? எனறும, மக்களுக்கும் பாதுகாப்பில்லாமல், கோவில் சிலைகளுக்கும் பாதுகாப்பில்லாமல் சட்டம் ஒழுங்கு சீரழிந்து போய் இருப்பது தான் திராவிட மாடலின் சாதனையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மதச்சார்பின்மையையும் சட்டம் ஒழுங்கையும் நிலைநாட்டுவதில் சிறிதும் அக்கறை இருந்தால், மக்களின் சமய நம்பிக்கைகளைத் தாக்கி, இந்து மரபை இழிவுபடுத்த நினைத்த சமூக விரோதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவாலய
அரசை வலியுறுத்துவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.