திருப்பூரில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 26 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பனியன் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். திருப்பூரில் வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஊடுருவி ஆவணங்கள் இன்றி பணியாற்றி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில், பல்லடம் அடுத்த குன்னாங்கல்பாளையம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில், போலி ஆதார் அட்டைகளை பயன்படுத்தி வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் வாடகை வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து வங்கதேசத்தைச் சேர்ந்த 26 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.