ஆரோக்கியத்திற்கு ஆதரவு : மருத்துவ குணமிக்க மூலிகை SOUP - சிறப்பு தொகுப்பு!
Apr 29, 2026, 02:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆரோக்கியத்திற்கு ஆதரவு : மருத்துவ குணமிக்க மூலிகை SOUP – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 19, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உணவே மருந்து என்பதை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் திருச்சியில் இயங்கி வரும் மூலிகை சூப் கடைகளுக்கு ஆதரவு பெருகி வருகிறது. இதுகுறித்து ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

இயற்கையான முறையில் தயாரிக்கும் மூலிகை சூப் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு மன அழுத்தத்தை குறைக்கும் மருந்தாக திகழ்கிறது. அந்தவகையில் கடந்த 30 வருடங்களாக திருச்சியில் மூலிகை ஜூஸ் கடை நடத்தி வருகிறார் முரளி .

திருச்சி ராஜா பார்க் பகுதியில் அமைந்துள்ள முரளி பழச்சாறு கடையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வருகிறார்கள். காலை 5 மணி முதல் 9 மணி வரை பல வகையான பிரெஷ் ஜூஸ் மற்றும் சூப் ஆகியவற்றை நடை பயிற்சிக்கு வருபவர்களுக்கு குறைந்த விலை தருகிறார்.

காலை வேளையில் வாக்கிங் செல்வர்கள் அந்த கடைக்கு செல்லாமல் போக மாட்டார்கள். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கடையில் அருகம்புல் ஜூஸ், ஆவாரம் பூ, கேரட் ஜூஸ், வாழை தண்டு, கற்றாழை , உள்ளிட பல அனைத்து வகையான பழச்சாறுகள் கிடைக்கும்.

இன்றைய தலைமுறைக்கு பழங்கால உணவுகளை மீட்டு மீண்டும் அவர்களின் உணவு பழக்கத்தில் மாற்றம் கொண்டு வந்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ எடுத்துக்காட்டும் விதமாக இதுபோன்ற இயற்கை உணவகங்கள் மற்றும் மூலிகை சூப் கடைகள் பல தலைதூக்கி வருகிறது. அதற்கு மக்கள் அளிக்கும் ஆதரவும் அதிகரித்து வருகிறது. இதேபோன்று திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை – பால் பண்ணை அருகே அமைந்துள்ள நண்டு சூப் கடை திருச்சியில் மிகவும் பிரபலமானதாகும்.

இந்தக் கடையை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் நடத்தி வருபவர் செந்தில்குமார். தான் பிறந்து வளர்ந்த பகுதியில் உணவே மருந்து அதுவே மனிதனுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் தாம் இதை ஒரு சேவையாக செய்து வருவதாக கூறுகிறார் செந்தில்குமார்.

இந்தக் கடையில் நண்டு சூப், சோயா ஆகிய இரண்டிற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து மூலிகை பொருட்களை கொண்டு தனியாக மசாலா அரைத்து மக்களுக்கு விற்பனை செய்து வருகிறார்.

இந்தக் கடை இரவு 7:30 மணியிலிருந்து 9 மணி வரை திறந்திருக்கும். கடை திறப்பதற்கு முன்பே நீண்ட வரிசையில் இன்று இந்த நண்டு சூப் மற்றும் சோயா ஆகியவற்றை சாப்பிடுவதற்கு மக்கள் ஆர்வத்துடன் வருகை தருகிறார்கள்.

ரசாயன பொருட்கள் கலப்படம் இல்லாமல் இயற்கையான முறையில் விளையும் பொருள்களை வைத்து தரமாக விற்பனை செய்தால் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்பதற்கு எளிய மனிதர்கள் நடத்தும் கடைகளுக்கு கிடைக்கும் வரவேற்பே சாட்சியாகும்.

ShareTweetSendShare
Previous Post

குஜராத்தில் 45 ஆண்டுகள் பணி புரிந்தாலும் ஒருநாள் கூட முருகனை வழிபடாமல் இருந்ததில்லை – புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன்

Next Post

திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 26 பேர் கைது!

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies