ஆரோக்கியத்திற்கு ஆதரவு : மருத்துவ குணமிக்க மூலிகை SOUP - சிறப்பு தொகுப்பு!
Sep 13, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆரோக்கியத்திற்கு ஆதரவு : மருத்துவ குணமிக்க மூலிகை SOUP – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 19, 2025, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உணவே மருந்து என்பதை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் திருச்சியில் இயங்கி வரும் மூலிகை சூப் கடைகளுக்கு ஆதரவு பெருகி வருகிறது. இதுகுறித்து ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

இயற்கையான முறையில் தயாரிக்கும் மூலிகை சூப் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு மன அழுத்தத்தை குறைக்கும் மருந்தாக திகழ்கிறது. அந்தவகையில் கடந்த 30 வருடங்களாக திருச்சியில் மூலிகை ஜூஸ் கடை நடத்தி வருகிறார் முரளி .

திருச்சி ராஜா பார்க் பகுதியில் அமைந்துள்ள முரளி பழச்சாறு கடையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வருகிறார்கள். காலை 5 மணி முதல் 9 மணி வரை பல வகையான பிரெஷ் ஜூஸ் மற்றும் சூப் ஆகியவற்றை நடை பயிற்சிக்கு வருபவர்களுக்கு குறைந்த விலை தருகிறார்.

காலை வேளையில் வாக்கிங் செல்வர்கள் அந்த கடைக்கு செல்லாமல் போக மாட்டார்கள். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கடையில் அருகம்புல் ஜூஸ், ஆவாரம் பூ, கேரட் ஜூஸ், வாழை தண்டு, கற்றாழை , உள்ளிட பல அனைத்து வகையான பழச்சாறுகள் கிடைக்கும்.

இன்றைய தலைமுறைக்கு பழங்கால உணவுகளை மீட்டு மீண்டும் அவர்களின் உணவு பழக்கத்தில் மாற்றம் கொண்டு வந்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ எடுத்துக்காட்டும் விதமாக இதுபோன்ற இயற்கை உணவகங்கள் மற்றும் மூலிகை சூப் கடைகள் பல தலைதூக்கி வருகிறது. அதற்கு மக்கள் அளிக்கும் ஆதரவும் அதிகரித்து வருகிறது. இதேபோன்று திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை – பால் பண்ணை அருகே அமைந்துள்ள நண்டு சூப் கடை திருச்சியில் மிகவும் பிரபலமானதாகும்.

இந்தக் கடையை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் நடத்தி வருபவர் செந்தில்குமார். தான் பிறந்து வளர்ந்த பகுதியில் உணவே மருந்து அதுவே மனிதனுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் தாம் இதை ஒரு சேவையாக செய்து வருவதாக கூறுகிறார் செந்தில்குமார்.

இந்தக் கடையில் நண்டு சூப், சோயா ஆகிய இரண்டிற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து மூலிகை பொருட்களை கொண்டு தனியாக மசாலா அரைத்து மக்களுக்கு விற்பனை செய்து வருகிறார்.

இந்தக் கடை இரவு 7:30 மணியிலிருந்து 9 மணி வரை திறந்திருக்கும். கடை திறப்பதற்கு முன்பே நீண்ட வரிசையில் இன்று இந்த நண்டு சூப் மற்றும் சோயா ஆகியவற்றை சாப்பிடுவதற்கு மக்கள் ஆர்வத்துடன் வருகை தருகிறார்கள்.

ரசாயன பொருட்கள் கலப்படம் இல்லாமல் இயற்கையான முறையில் விளையும் பொருள்களை வைத்து தரமாக விற்பனை செய்தால் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்பதற்கு எளிய மனிதர்கள் நடத்தும் கடைகளுக்கு கிடைக்கும் வரவேற்பே சாட்சியாகும்.

Share
Tweet
SendShare
Previous Post

குஜராத்தில் 45 ஆண்டுகள் பணி புரிந்தாலும் ஒருநாள் கூட முருகனை வழிபடாமல் இருந்ததில்லை – புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன்

Next Post

திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 26 பேர் கைது!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies