குஜராத்தில் 45 ஆண்டுகள் பணி செய்தாலும் ஒருநாள் கூட முருகனை வழிபடாமல் இருந்ததில்லை என புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளார்.
மதுரை அம்மா திடலில் இந்து முன்னணி அமைப்பின் சார்வில் ஜூன் 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வழிபாட்டின் 4-ம் நாளான இன்று அம்மா திடல் சென்ற புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முருகப்பெருமான் மீது தனக்கு தனிப்பட்ட நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். குஜராத்தில் 45 ஆண்டுகள் பணி செய்தாலும் ஒருநாள் கூட முருகனை வழிபடாமல் இருந்ததில்லை எனவும் அவர் கூறினார்.