சிறுவன் கடத்தல் விவகாரத்தில் ஏடிஜிபி ஜெயராம் மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உயர்நீதிமன்றம் ஆணையிட்டதையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மேல்முறையீடு செய்த ஜெயராமின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆஜரான தமிழக அரசு தரப்பு, ஜெயராமை பணியிடை நீக்கம் செய்ததற்கான ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து, விசாரணை முடியும் வரை பணியிடை நீக்க உத்தரவை திரும்பப் பெறப்போவதில்லை என தெரிவித்தது.
இதையடுத்து விசாரணையை சிபிசிஐடி போன்ற வேறு துறைக்கு மாற்ற பரிந்துரைத்து, வழக்கினை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.