ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக திமுக அரசு தேர்தலின்போது பொய்யான வாக்குறுதிகளை அளித்ததாக, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டது. தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலவரை ஊதியம் தொடர்பான கோரிக்கைளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அப்போது வலியுறுத்தப்பட்டது.
இது தொடர்பாக பேட்டியளித்த அச்சங்கத்தின் நிர்வாகிகள், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆகஸ்ட் மாதம் மாநில அளவில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர். மேலும், திமுக அரசு ஆட்சியை இழந்து ஆட்சி மாற்றம் ஏற்படவும் தாங்கள் காரணமாக இருப்போம் என தெரிவித்தனர்.