இன்று பிறந்த நாள் கொண்டாடும் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், திரௌபதி முர்முவின் வாழ்க்கையும் தலைமைத்துவமும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருவதாக கூறியுள்ளார்.
பொது சேவை, சமூக நீதி மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அனைவருக்கும் நம்பிக்கை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
, பின்தங்கியவர்களை மேம்படுத்துவதற்கான முர்முவின் வாழ்நாள் முயற்சிகளையும் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். ஏழைகள் மற்றும் நலிந்தவர்களுக்கு அதிகாரம் அளிக்க அவர் எப்போதும் பாடுபட்டுள்ளார் என்றும், மக்கள் சேவையில் அவருக்கு நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கட்டும்” என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.