சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப் பணிகள் நடைபெறுவதால் அங்கிருந்து புறப்படும் 5 விரைவு ரயில்கள் இன்று முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை எழும்பூர் – மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயில் இன்று முதல் ஆக.18-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து காலை 6.22 மணிக்கு புறப்படும் எனவும் மறுமார்க்க ரயில் இரவு 9.25 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல எழும்பூர் – மன்னார்குடி இடையே இயக்கப்படும் மன்னை விரைவு ரயில் ஆக.18-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இரவு 11.22 மணிக்கு புறப்படும் எனவும், எழும்பூர் – திருச்செந்தூர் இடையேயான ரயில் தாம்பரத்தில் இருந்து மாலை 4.27 மணிக்கு புறப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
மேலும், எழும்பூர் – குருவாயூர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் இன்று முதல் ஆக.19-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து காலை 10.47 மணிக்கு புறப்படும் எனவும் மறுமார்க்க ரயில் இரவு 7.45 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
இதே போல சென்னையில் இருந்து கொல்லத்திற்கு செல்லும் விரைவு ரயில் தாம்பரத்தில் இருந்து மாலை 5.27 மணிக்கு இயக்கப்படும் எனவும் அங்கிருந்து புறப்படக்கூடிய ரயில் அதிகாலை 2.45 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.