நம் நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்றுப் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கிலத்தில் பேசுபவர்கள் அவமானமாக உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை எனவும், நம் நாட்டின் மொழிகள் இல்லையென்றால் நாம் இந்தியர்களாக இல்லாமல் போய் விடுவோம் என்றும் தெரிவித்தார்.
மேலும், நமது நாட்டையும், கலாச்சாரத்தையும் புரிந்து கொள்ள எந்த அந்நிய மொழியும் போதுமானதாக இருக்காது என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.