ஓசூர் அரசு மருத்துவமனையில் இடிந்து விழுந்த சுற்றுச் சுவர் 4 மாதங்களாகக் கட்டப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
ஓசூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள கழிவு நீர் கால்வாயை அகற்றும்போது, மருத்துவமனை வளாகத்தின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. தற்போது கழிவு நீர் கால்வாய் மற்றும் சாலை விரிவாக்க பணிகள் முடிவுப்பெற்ற நிலையிலும், சுற்றுச் சுவர் சீரமைக்கப்படாமல் உள்ளது.
இதனால், சுற்றுச்சுவர் சிதிலங்களைத் தாண்டி பொதுமக்கள் சிரமப்பட்டு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுச் சுவரை யார் கட்டுவது என்பதில் அரசுத் துறை அதிகாரிகள் இடையே போட்டி நிலவுவதால் பணி தாமதமாவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.