கோவை அருகே திமுக நிர்வாகி ஆக்கிரமித்து வைத்திருந்த நிலத்தின் போலி பட்டாவைக் கோட்டாட்சியர் ரத்து செய்து உரிமையாளரிடம் ஒப்படைத்து ஆணை வெளியிட்டுள்ளார்.
கோவை மாவட்டம், குமாரபாளையம் கிராமத்தில் சற்குணன் என்பவருக்குச் சொந்தமாக 36 செண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை, கோவை வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணியின் தலைவரான விஸ்வநாதன் என்பவர் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயற்சி செய்து வந்துள்ளார்.
இது தொடர்பாக செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தும், போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
நிலத்தின் ஆவணங்களைச் சரிபார்த்து கோட்டாட்சியர் இருதரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டார். அதில், போலி பட்டா தயாரித்து நிலத்தைத் தனது பெயருக்கு மாற்ற விஸ்வநாதன் முயற்சித்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, நிலத்தின் போலி பட்டாவைக் கோட்டாட்சியர் ரத்து செய்து உரிமையாளரிடம் ஒப்படைத்து ஆணை வெளியிட்டுள்ளார்.