அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு மேலும் 90 நாட்கள் கால அவகாசத்தை அதிபர் டிரம்ப் வழங்கியுள்ளார்.
அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி சீன செயலியான டிக்டாக்கிற்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை கடந்த ஜனவரி 19 முதல் அமலில் உள்ளது. இதனால் தற்காலிகமாகத் தனது சேவையை நிறுத்துவதாக டிக்டாக் நிறுவனம் அறிவித்ததைத் தொடர்ந்தே அதிபர் டிரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார்.