சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக கார் ஓட்டி சென்ற நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
காமராஜர் சாலையில் அதிவேகமாகச் சென்ற கார் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்து பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
அப்போது போலீசார் காரை நிறுத்த முயன்ற போது வேகத்தைக் குறைத்த கார் ஓட்டுநர் மீண்டும் காரை வேகமாக இயக்கி தப்பியோடினார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.