கோடநாடு கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்ற பங்களாவில் ஆய்வு நடத்த வேண்டும் எனக் குற்றவாளி ஜித்தன் ஜாய் அளித்த மனுவிற்கு, தமிழக அரசு எழுத்துப்பூர்வமாகப் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கானது உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கின் முக்கிய குற்றவாளிகளான சயான், ஜித்தன் ஜாய் ஆகியோர் நேரில் ஆஜராகிய நிலையில், சம்பவம் நடைபெற்ற பங்களாவில் ஆய்வு நடத்த வேண்டும் என ஜித்தன் ஜாய் மனு அளித்தார்.
இதற்கு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், எழுத்துப்பூர்வமாகப் பதிலளிக்க நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணையை ஜூலை மாதம் 18ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.