11-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி விசாகப்பட்டினத்தில் பிரதமா் மோடி பங்கேற்கும் மிக பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பிரதமர் மோடியின் முயற்சியால் ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமக கடந்த 2014-ம் ஆண்டு ஐ.நா. ஏற்றது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினமமாக கொண்டாடப்படுகிறது. இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளில் யோகா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மேலும், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோரும் பங்கேற்கின்றனர்.