மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்ட பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் காமாட்சி அம்மன் கோயிலில் வேல் பூஜை நடத்தி வழிபட்டனர்.
நாளை மதுரை மாவட்டம், பாண்டிக்கோயிலில் உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.
தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான முருக பக்தர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ள நிலையில், காஞ்சிபுரத்தில் இருந்தும் சுமார் 5 ஆயிரம் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் மதுரை புறப்பட்டனர். 35 பேருந்துகள், 50 வேன்கள் மற்றும் 100 கார்களில், முறையான அனுமதி பெற்று அவர்கள் பயணத்தை தொடங்கியுள்ளனர்.