இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது.
ஈரான் – இஸ்ரேல் இடையே 9-வது நாளாக போர் நீடித்து வருகிறது. ஏவுகணைகளை ஏவி இரு நாடுகளும் மாறி மாறி நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், இஸ்ரேலின் ஜெருசலேம், ஹைஃபா, டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களில் உள்ள கட்டடம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் கட்டடங்களும், வாகனங்களும் கடும் சேதமடைந்தன.
இதன் காரணமாக ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் ,
தெற்கு இஸ்ரேலில் உள்ள ஒரு குழந்தைகள் மையத்தை ஈரான் தாக்கியதாக கூறியுள்ளது. ஏற்கனவே பீர்ஷீபா நகரில் உள்ள மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் மீண்டும் குடியிருப்புகளை குறிவைத்து ஈரான் தாக்கியது குறிப்பிடத்தக்கது.