பல கோடி மக்களின் வாழ்க்கையை யோகா மாற்றியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அங்கீகரிக்க கோரி ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா முன்வைத்த தீர்மானத்துக்கு உலகின் 175 நாடுகள் ஆதரவாக நின்றதாக கூறினார். உலக மக்களை யோகா ஒன்றிணைப்பதாக குறிப்பிட்ட அவர், நான் என்ற எண்ணத்தை விட்டு, நாம் என்ற எண்ணத்தை யோகா உருவாக்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்று முழு உலகம் பல பகுதிகளில் பதற்றம், அமைதியின்மை அதிகரித்து வருவதாக தெரிவித்த பிரதமர், இதுபோன்ற காலங்களில், யோகா நமக்கு அமைதியின் திசையை அளிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
மனிதகுலம் சுவாசிக்க, சமநிலைப்படுத்த மற்றும் முழுமையடைய யோகா இன்றியமையாதது என்றும் மோடி தெரிவித்தார்.