நாமக்கல்லில் நிலமோசடியில் ஈடுபட்ட அதிமுக நகரச் செயலாளரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
சேலத்தைச் சேர்ந்த பத்மாவதி என்பவர் நாமக்கல் மாவட்ட எஸ்.பியிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் பாலசுப்பிரமணியம் மற்றும் பழனிவேல் ஆகியோர் மாதத்தவணையில் வீட்டுமனை விற்பதாகக்கூறி தன்னிடம் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற்றதாகவும், ஆனால் வீட்டை கிரயம் செய்ய மறுத்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் மர்ம நபர்களைக் கொண்டு மிரட்டி வரும் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பத்மாவதி புகாரளித்து இருந்தார்.
அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அதிமுக நகர செயலாளர் பலசுப்பிரமணியத்தைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பழனிவேலை தேடிவருகின்றனர்..