காசாவில் மே மாதத்தில் மட்டும் ஊட்டச்சத்துக் குறைபாட்டின் காரணமாகச் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆபத்தான முறையில் அதிகரித்து உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பிறந்து 6 மாதங்கள் முதல் 5 வயது வரையிலான 5119 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டின் காரணமாகச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது கடந்த ஏப்ரல் மாதத்தை ஒப்பிடும்போது 50 சதவீதம் மற்றும் பிப்ரவரி மாதத்தினை ஒப்பிடும்போது 150 சதவீதம் அதிகம் என்று கூறப்படுகிறது.