நீதிமன்றம் உத்தரவிட்டும் பட்டா வழங்க மறுப்பு : தமிழக அரசு மீது நரிக்குறவ மக்கள் குற்றச்சாட்டு!
Sep 30, 2025, 07:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீதிமன்றம் உத்தரவிட்டும் பட்டா வழங்க மறுப்பு : தமிழக அரசு மீது நரிக்குறவ மக்கள் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jun 24, 2025, 06:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம் முத்து நகர் பகுதியில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வசிக்கும் மக்களுக்குப் பட்டா வழங்க மறுப்பதாகப் புகார் எழுந்துள்ளது. நீதிமன்றத்தில் சாதகமான உத்தரவு கிடைத்த போதிலும் அவர்களுக்குப் பட்டா வழங்க மறுப்பதாகத் தமிழக அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை மாவட்டம் முத்துநகர் பகுதியில் சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவில் நூற்றுக்கும் அதிகமான நரிக்குறவர் சமூக மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். குடிநீர், மின்சாரம், சாலை போன்ற அடிப்படை வசதிகள் கோரி பலமுறை  மனு வழங்கியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நீதிமன்றத்தை நாடி தங்கள் பகுதிக்கான மின்சாரத்தை நரிக்குறவ சமூக மக்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக பெற்றனர். கால் நூற்றாண்டுக்கும் மேலாக தாங்கள் வசித்து வரும் பகுதியிலேயே பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இன்று வரை நிறைவேறாமலே இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்

அடிப்படை வசதிகள் தொடங்கி வீட்டு மனைப் பட்டா வரை தங்களுக்குத் தேவையான ஒவ்வொன்றையும் நீதிமன்றத்தையே நாடி பெறும் அளவிற்கு அப்பகுதி நரிக்குறவ சமூக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.   பட்டா வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற வழக்கிலும் தங்களுக்கு ஆதரவான தீர்ப்பு கிடைத்த பின்பும் கூட அரசு நிர்வாகம் அதனைச் செய்து தர மறுப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

குடிநீர், கழிவறை, சாலை என அத்தியாவசிய வசதிகள் கூட முறையாக இன்றி சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை தவித்து வரும் நிலையில் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு மாவட்ட நிர்வாகமோ, தமிழக அரசோ இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது அச்சமூக மக்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது

சமூகநீதியின் அங்கம் திராவிட மாடல் அரசு எனப் பல கோடி ரூபாய் செலவு செய்து விளம்பரம் செய்யும் அரசு, அதில் சிறிதளவு தொகையை ஒதுக்கி நரிக்குறவ சமூக மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தருவதோடு, அவர்கள் வசிக்கும் இடத்திலேயே பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: Relocation of people from Narikurava to forest area: Strong opposition to the Tamil Nadu governmentதமிழக அரசுக்கு கடும் எதிர்ப்புநரிக்குறவ மக்கள்
ShareTweetSendShare
Previous Post

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் ரூ.60,000 கோடி இழப்பு!

Next Post

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies