சோழர் கால கல்வெட்டுகள் : தொல்லியல் ஆய்வு நடத்த வலியுறுத்தல்!
Nov 11, 2025, 05:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சோழர் கால கல்வெட்டுகள் : தொல்லியல் ஆய்வு நடத்த வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Jun 21, 2025, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம் சூலூர் அருகே அமைந்திருக்கும் செலக்கரச்சல் கிராமத்தில் சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட தொன்மைமிக்க கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. பொதுமக்கள் சேகரித்து வைத்திருக்கும் கல்வெட்டை ஆய்வுக்கு உட்படுத்துவதோடு, அப்பகுதியில் விரிவான தொல்லியல் ஆய்வை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே அமைந்திருக்கிறது இந்த செலக்கரச்சல் கிராமம். தொன்மை மிக்க பகுதியாகக் கூறப்படும் இக்கிராமத்தின் குளக்கரையில் நூற்றாண்டுகள் பழமையான செப்புத் திருமேனிகளும், சோழர் காலத்தைச் சேர்ந்த பல்வேறு கல்வெட்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சோழர்கள் காலத்தில் செலக்கரச்சல் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் பூஜை நடத்துவதற்காகப் பெறப்பட்ட வருவாய் குறித்த விவரங்கள் அக்கல்வெட்டில் இடம்பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு படையெடுப்புகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் மண்ணோடு மண்ணாக மக்கிப் போன கல்வெட்டுகள் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன.

செலக்கரச்சல் கிராமத்தின் வீடுகள், குளக்கரைகள் உட்பட பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் சேகரிக்கப்பட்டு அங்குள்ள சிவன் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சோழர் காலத்துக் கல்வெட்டுகள் என்பதால் தமிழக அரசின் தொல்லியல் துறை அவற்றை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செலக்கரச்சல் பகுதியில் மேலும் பல்வேறு வரலாற்றுத் தொன்மை மிக்க சான்றுகள் புதைந்திருக்கக் கூடும் என்பதால் தொல்லியல் துறை விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோழமன்னர்களான ராஜேந்திர சோழன், விக்ரம சோழன் உள்ளிட்ட பல மன்னர்கள் நன்கொடை கொடுத்தத்தற்கான சான்றுகளும் தற்போது கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன. மேலும் வெள்ளலூர் சாலையில் உள்ள குளமும், அவற்றால் விளையும் நிலமும் சிவன் கோயிலுக்குச் சொந்தமானது உள்ளிட்ட பல்வேறு முக்கியமான தகவல்களும் அக்கல்வெட்டில் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

தொன்மைமிக்க நாகரீகம் இருந்ததற்கான சான்றுகள் அடுத்தடுத்து தென்படும் செலக்கரச்சல் கிராமத்தில் விரிவான தொல்லியல் ஆய்வை மேற்கொண்டு இக்கிராமத்தின் சிறப்புகளை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: Chola period inscriptions: Urgent call for archaeological studyசோழர் கால கல்வெட்டுகள்
ShareTweetSendShare
Previous Post

51 முறை தண்டால் செய்து அசத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

Next Post

சீனாவை கைகழுவும் பாக்.? : ட்ரம்புடன் அசிம் முனீர் கை கோர்த்த பின்னணி!

Related News

ஈரோட்டில் நெசவாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்!

தமிழகத்தில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும் – ஜெகநாத் மிஸ்ரா

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி : திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு!

டெல்லி கார் வெடிப்பு : சிசிடிவியில் பதிவான முக்கிய தடயங்கள் என்ன?

சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி – சிக்கிய ஜென்டில் மேன்!

Load More

அண்மைச் செய்திகள்

ரிச்சா கோஷ் பெயரில் புதிய கிரிக்கெட் திடல் – மம்தா அறிவிப்பு

நடிகர் தர்மேந்திரா குறித்த வதந்தி – முற்றுப்புள்ளி குடும்பத்தினர்!

THAR கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் – ஹரியானா டிஜிபி கருத்தால் இணையத்தில் தீ பறக்கும் வாதம்!

கர்நாடகா : ஆர்எஸ்எஸ்-ல் இணைவதற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அக்டோபர் மாதத்தில் மட்டும் 6 மடங்கு அதிகரிப்பு!

பிரதமர் மோடியை வரவேற்றார் பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே!

அவதூறு வழக்கில் திமுக எம்.பி. டி. ஆர். பாலு கட்டாயம் குறுக்கு விசாரணையைச் சந்தித்துதான் ஆக வேண்டும் – நீதிமன்றம்

சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஆஜர்!

மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்!

சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் : வாலாட்டும் யூனுஸிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

சேலம் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச 12 பேரை அகதிகள் முகாமில் அடைத்த போலீசார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies