சோழர் கால கல்வெட்டுகள் : தொல்லியல் ஆய்வு நடத்த வலியுறுத்தல்!
Mar 19, 2026, 02:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சோழர் கால கல்வெட்டுகள் : தொல்லியல் ஆய்வு நடத்த வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Jun 21, 2025, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம் சூலூர் அருகே அமைந்திருக்கும் செலக்கரச்சல் கிராமத்தில் சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட தொன்மைமிக்க கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. பொதுமக்கள் சேகரித்து வைத்திருக்கும் கல்வெட்டை ஆய்வுக்கு உட்படுத்துவதோடு, அப்பகுதியில் விரிவான தொல்லியல் ஆய்வை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே அமைந்திருக்கிறது இந்த செலக்கரச்சல் கிராமம். தொன்மை மிக்க பகுதியாகக் கூறப்படும் இக்கிராமத்தின் குளக்கரையில் நூற்றாண்டுகள் பழமையான செப்புத் திருமேனிகளும், சோழர் காலத்தைச் சேர்ந்த பல்வேறு கல்வெட்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சோழர்கள் காலத்தில் செலக்கரச்சல் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் பூஜை நடத்துவதற்காகப் பெறப்பட்ட வருவாய் குறித்த விவரங்கள் அக்கல்வெட்டில் இடம்பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு படையெடுப்புகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் மண்ணோடு மண்ணாக மக்கிப் போன கல்வெட்டுகள் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன.

செலக்கரச்சல் கிராமத்தின் வீடுகள், குளக்கரைகள் உட்பட பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் சேகரிக்கப்பட்டு அங்குள்ள சிவன் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சோழர் காலத்துக் கல்வெட்டுகள் என்பதால் தமிழக அரசின் தொல்லியல் துறை அவற்றை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செலக்கரச்சல் பகுதியில் மேலும் பல்வேறு வரலாற்றுத் தொன்மை மிக்க சான்றுகள் புதைந்திருக்கக் கூடும் என்பதால் தொல்லியல் துறை விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோழமன்னர்களான ராஜேந்திர சோழன், விக்ரம சோழன் உள்ளிட்ட பல மன்னர்கள் நன்கொடை கொடுத்தத்தற்கான சான்றுகளும் தற்போது கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன. மேலும் வெள்ளலூர் சாலையில் உள்ள குளமும், அவற்றால் விளையும் நிலமும் சிவன் கோயிலுக்குச் சொந்தமானது உள்ளிட்ட பல்வேறு முக்கியமான தகவல்களும் அக்கல்வெட்டில் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

தொன்மைமிக்க நாகரீகம் இருந்ததற்கான சான்றுகள் அடுத்தடுத்து தென்படும் செலக்கரச்சல் கிராமத்தில் விரிவான தொல்லியல் ஆய்வை மேற்கொண்டு இக்கிராமத்தின் சிறப்புகளை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: Chola period inscriptions: Urgent call for archaeological studyசோழர் கால கல்வெட்டுகள்
ShareTweetSendShare
Previous Post

51 முறை தண்டால் செய்து அசத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

Next Post

சீனாவை கைகழுவும் பாக்.? : ட்ரம்புடன் அசிம் முனீர் கை கோர்த்த பின்னணி!

Related News

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies