சோழர் கால கல்வெட்டுகள் : தொல்லியல் ஆய்வு நடத்த வலியுறுத்தல்!
Jul 23, 2026, 03:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சோழர் கால கல்வெட்டுகள் : தொல்லியல் ஆய்வு நடத்த வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Jun 21, 2025, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம் சூலூர் அருகே அமைந்திருக்கும் செலக்கரச்சல் கிராமத்தில் சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட தொன்மைமிக்க கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. பொதுமக்கள் சேகரித்து வைத்திருக்கும் கல்வெட்டை ஆய்வுக்கு உட்படுத்துவதோடு, அப்பகுதியில் விரிவான தொல்லியல் ஆய்வை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே அமைந்திருக்கிறது இந்த செலக்கரச்சல் கிராமம். தொன்மை மிக்க பகுதியாகக் கூறப்படும் இக்கிராமத்தின் குளக்கரையில் நூற்றாண்டுகள் பழமையான செப்புத் திருமேனிகளும், சோழர் காலத்தைச் சேர்ந்த பல்வேறு கல்வெட்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சோழர்கள் காலத்தில் செலக்கரச்சல் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் பூஜை நடத்துவதற்காகப் பெறப்பட்ட வருவாய் குறித்த விவரங்கள் அக்கல்வெட்டில் இடம்பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு படையெடுப்புகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் மண்ணோடு மண்ணாக மக்கிப் போன கல்வெட்டுகள் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன.

செலக்கரச்சல் கிராமத்தின் வீடுகள், குளக்கரைகள் உட்பட பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் சேகரிக்கப்பட்டு அங்குள்ள சிவன் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சோழர் காலத்துக் கல்வெட்டுகள் என்பதால் தமிழக அரசின் தொல்லியல் துறை அவற்றை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செலக்கரச்சல் பகுதியில் மேலும் பல்வேறு வரலாற்றுத் தொன்மை மிக்க சான்றுகள் புதைந்திருக்கக் கூடும் என்பதால் தொல்லியல் துறை விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோழமன்னர்களான ராஜேந்திர சோழன், விக்ரம சோழன் உள்ளிட்ட பல மன்னர்கள் நன்கொடை கொடுத்தத்தற்கான சான்றுகளும் தற்போது கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன. மேலும் வெள்ளலூர் சாலையில் உள்ள குளமும், அவற்றால் விளையும் நிலமும் சிவன் கோயிலுக்குச் சொந்தமானது உள்ளிட்ட பல்வேறு முக்கியமான தகவல்களும் அக்கல்வெட்டில் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

தொன்மைமிக்க நாகரீகம் இருந்ததற்கான சான்றுகள் அடுத்தடுத்து தென்படும் செலக்கரச்சல் கிராமத்தில் விரிவான தொல்லியல் ஆய்வை மேற்கொண்டு இக்கிராமத்தின் சிறப்புகளை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: Chola period inscriptions: Urgent call for archaeological studyசோழர் கால கல்வெட்டுகள்
ShareTweetSendShare
Previous Post

51 முறை தண்டால் செய்து அசத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

Next Post

சீனாவை கைகழுவும் பாக்.? : ட்ரம்புடன் அசிம் முனீர் கை கோர்த்த பின்னணி!

Related News

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

Load More

அண்மைச் செய்திகள்

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies