சோழர் கால கல்வெட்டுகள் : தொல்லியல் ஆய்வு நடத்த வலியுறுத்தல்!
Sep 10, 2026, 06:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சோழர் கால கல்வெட்டுகள் : தொல்லியல் ஆய்வு நடத்த வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Jun 21, 2025, 08:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை மாவட்டம் சூலூர் அருகே அமைந்திருக்கும் செலக்கரச்சல் கிராமத்தில் சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட தொன்மைமிக்க கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. பொதுமக்கள் சேகரித்து வைத்திருக்கும் கல்வெட்டை ஆய்வுக்கு உட்படுத்துவதோடு, அப்பகுதியில் விரிவான தொல்லியல் ஆய்வை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே அமைந்திருக்கிறது இந்த செலக்கரச்சல் கிராமம். தொன்மை மிக்க பகுதியாகக் கூறப்படும் இக்கிராமத்தின் குளக்கரையில் நூற்றாண்டுகள் பழமையான செப்புத் திருமேனிகளும், சோழர் காலத்தைச் சேர்ந்த பல்வேறு கல்வெட்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சோழர்கள் காலத்தில் செலக்கரச்சல் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் பூஜை நடத்துவதற்காகப் பெறப்பட்ட வருவாய் குறித்த விவரங்கள் அக்கல்வெட்டில் இடம்பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு படையெடுப்புகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் மண்ணோடு மண்ணாக மக்கிப் போன கல்வெட்டுகள் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன.

செலக்கரச்சல் கிராமத்தின் வீடுகள், குளக்கரைகள் உட்பட பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் சேகரிக்கப்பட்டு அங்குள்ள சிவன் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சோழர் காலத்துக் கல்வெட்டுகள் என்பதால் தமிழக அரசின் தொல்லியல் துறை அவற்றை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செலக்கரச்சல் பகுதியில் மேலும் பல்வேறு வரலாற்றுத் தொன்மை மிக்க சான்றுகள் புதைந்திருக்கக் கூடும் என்பதால் தொல்லியல் துறை விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோழமன்னர்களான ராஜேந்திர சோழன், விக்ரம சோழன் உள்ளிட்ட பல மன்னர்கள் நன்கொடை கொடுத்தத்தற்கான சான்றுகளும் தற்போது கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன. மேலும் வெள்ளலூர் சாலையில் உள்ள குளமும், அவற்றால் விளையும் நிலமும் சிவன் கோயிலுக்குச் சொந்தமானது உள்ளிட்ட பல்வேறு முக்கியமான தகவல்களும் அக்கல்வெட்டில் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

தொன்மைமிக்க நாகரீகம் இருந்ததற்கான சான்றுகள் அடுத்தடுத்து தென்படும் செலக்கரச்சல் கிராமத்தில் விரிவான தொல்லியல் ஆய்வை மேற்கொண்டு இக்கிராமத்தின் சிறப்புகளை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: Chola period inscriptions: Urgent call for archaeological studyசோழர் கால கல்வெட்டுகள்
Share
Tweet
SendShare
Previous Post

51 முறை தண்டால் செய்து அசத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

Next Post

சீனாவை கைகழுவும் பாக்.? : ட்ரம்புடன் அசிம் முனீர் கை கோர்த்த பின்னணி!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies