மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை மாதிரி முருகர் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி வழிபாடு மேற்கொண்டார்.
மதுரைக்குச் சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி அறுபடை வீடுகளின் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார். அப்போது ஆளுநருக்குப் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் ஒவ்வொரு சன்னதியிலும் சென்று சாமி தரிசனம் செய்த ஆளுநர், அறுபடை வீடு மாதிரி காட்சியின் முன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து அங்குக் கூடியிருந்த பக்தர்களுடன் ஆளுநர் கைகுலுக்கி மகிழ்ந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, சிவன் எல்லா இடங்களிலும் இருப்பதாகவும், அறுபடை வீடுகளையும் ஒரே இடத்தில் பார்ப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். இந்நிகழ்வு அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.