சாலையின் நடுவே கொடிக்கம்பங்கள் நடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் வழிநெடுக திமுக கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சாலையின் நடுவே கட்சி கொடிகள் உள்ளிட்ட கொடிக்கம்பங்களை நடக்கூடாது எனவும் மீறினால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டி இருக்கும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
ஆனால் அதனைப் பொருட்படுத்தாத திமுகவினர் அண்ணாசாலையிலிருந்து வள்ளுவர் கோட்டம் வரை சாலையின் நடுவே கட்சிக் கொடிகளை நட்டுள்ளனர்.
முதலமைச்சர் ஸ்டாலினின் வருகையை ஒட்டி திமுக கொடிக்கம்பங்கள் மற்றும் பொது மின்சாரத்தைப் பயன்படுத்தி எல்.இ.டி பல்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற உத்தரவை மீறிச் செயல்பட்டுள்ள திமுகவினரின் இந்த நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.