விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூரில் முன்னாள் அமைச்சர் பொன்முடி நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்களுக்கு திமுகவினர் பணம்வழங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திருவெண்ணெய் நல்லூர் பேரூராட்சியில் பல்வேறு திட்டப் பணிகளை முன்னாள் அமைச்சர் பொன்முடி துவங்கி வைத்தார்.
குறிப்பாக திருவெண்ணைநல்லூர் நகர் பகுதியில் 22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிறுவர் பூங்காவையும், 13 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தையும் முன்னாள் அமைச்சர் பொன்முடி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிலையில் அங்கன்வாடி மையத்தில் போதிய கூட்டம் இல்லாததால் ஒருவருக்கு 100 ரூபாய் வழங்குவதாகக் கூறி திமுக நகர செயலாளர் கணேசன், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை வரவழைத்துள்ளார்.
பின்னர் நிகழ்ச்சி நிறைவடைந்ததும், பெண்களுக்கும் 100 ரூபாய் கொடுத்து வெளியே அனுப்பும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.