விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே தனியார் கல்லூரியின் மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அரகண்டநல்லூர் அடுத்த கொல்லூர் கிராம எல்லைப் பகுதியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் B.Sc கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு பயின்ற தீன திரிஷா எனும் மாணவி கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் விழுப்புரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர குமார் குப்தா கல்லூரியில் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து மாணவியின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் மாணவி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததும் அதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.