மதுரை முருக பக்தர்கள் மாநாடு வெற்றிபெற வேண்டி தமிழகம் முழுவதும் முருகன் கோயில்களில் பாஜக-வினர் சார்பில் வேல் பூஜை நடைபெற்றது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்து மலை முருகன் கோயிலில் பாஜக சார்பில் முருகப்பெருமானின் வேலுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
பாபநாசம் பாபநாசநாதர் கோயில் முன்பு உள்ள தாமிரபரணி ஆற்றில் முருகனுடைய புனித வேல் நீராட்டி அபிஷேகம் செய்யப்பட்டது. பாபநாச நாதர் சன்னதியிலும், உலகாம்பிகை சன்னதியிலும் முருகனுடைய வேலுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அருப்புக்கோட்டையில் பிரசித்தி பெற்ற வாலசுப்பிரமணியர் சுவாமி கோயிலில் பூஜைக்காக கொண்டு செல்லப்படும் வேல் வைக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளிமலை முருகன் கோயிலில் பூஜிக்கப்பட்ட வேலை சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி மேற்கு மாவட்டத் தலைவர் சுரேசிடம் ஒப்படைத்தார் நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் பவானி எட்வின் ஜோஸ் உட்பட ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டு வெற்றிவேல் வீரவேல் என பக்தி முழக்கமிட்டு கோயிலை வலம் வந்தனர்