சென்னை நுங்கம்பாக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னையின் அடையாளங்களில் ஒன்றான வள்ளுவர் கோட்டம், 80 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு உள்ளது. 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ஆயிரத்து 548 இருக்கைகளுடன் ஏசி வசதி கொண்ட அய்யன் வள்ளுவர் கலையரங்கமும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதே போல் குறள் மணிமாடம். திருக்குறள் ஆய்வரங்கம் மற்றும் ஆராய்ச்சி நூலகம், கார் பார்கிங், உணவகம், விற்பனையகம், வேயா மாடம் என அனைத்தும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.