ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் மோசமாகும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் ஈரான் இடையே கடும் தாக்குதல் நடைபெற்றுவரும் நிலையில், அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தின. இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், உலகிலேயே தீவிரவாதத்திற்கு அதிக ஆதரவு அளிக்கும் நாடு ஈரான்தான் என குற்றம்சாட்டினார். ஈரான் மீதான தாக்குதல் வெற்றி அடைந்துள்ளது எனவும், ஈரானில் அமைதி ஏற்படும் அல்லது அழிவு ஏற்படும் எனவும் கூறினார்.
மேலும், ஈரானில் இன்னும் பல இடங்களை குறிவைத்துள்ளோம் என கூறிய ட்ரம்ப், அமைதி பாதைக்கு திரும்பாவிட்டால் எஞ்சியுள்ள இலக்குகளையும் தாக்குவோம் என எச்சரித்தார்.