கோவை செட்டிப்பாளையத்தில் போர் போடுவதாக கூறி அரசு நிதி மோசடி செய்யப்பட்டதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்த நிலையில் குழாய்கள் அகற்றப்பட்டுள்ளன.
திமுகவை சேர்ந்த செட்டிபாளையம் பேரூராட்சி தலைவர் ரங்கசாமி மற்றும் துணைத் தலைவர் கனகராஜ் ஆகியோர் மூன்று லட்சம் ரூபாய் அரசு நிதியை பயன்படுத்தி 7 அடிக்கு மட்டுமே போர் போட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
போர் போடும் இயந்திரம் இல்லாமல் வெறும் ஜேசிபி வைத்து போர் போட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். கோவை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுத்து உரிய முறையில் போர் போட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 7 அடிக்கு மட்டுமே போடப்பட்ட குழாய்கள் அகற்றப்பட்டுள்ளன.