கட்டிய ஒன்றரை ஆண்டுகளில் இடிந்து விழும் குடியிருப்புகள் - பரிதவிக்கும் மக்கள்!
Aug 15, 2025, 07:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கட்டிய ஒன்றரை ஆண்டுகளில் இடிந்து விழும் குடியிருப்புகள் – பரிதவிக்கும் மக்கள்!

Web Desk by Web Desk
Jun 23, 2025, 06:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கட்டி முடிக்கப்பட்ட ஒன்றரை வருடத்தில் மேற்கூரை இடிந்து விழும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்புகள் அங்கு வசிக்கும் மக்களின் உயிர் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. குடியிருப்பை முழுமையாக ஆய்வு செய்து அதன் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என குடியிருப்புவாசிகள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை அடுத்த திருவான்மியூரில் உள்ள பெரியார் நகரில் இடிந்து விழும் நிலையிலிருந்த நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்பை அகற்றிவிட்டு புதியதாகக் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு அண்மையில் திறக்கப்பட்டது.

62 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கூட ஆகாத நிலையில், குடியிருப்புகளின் மேற்கூரைகள் இடிந்து விழுவதால் அங்குக் குடியிருக்கும் மக்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். குடியிருப்பின் உண்மை நிலை குறித்து அறியத் தமிழ் ஜனம் தொலைக்காட்சி நடத்திய நேரடி கள ஆய்வில் அதன் நிலை மேலும் மோசமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. ஒவ்வொரு முறை வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளாகும் போது ஆய்வு செய்வதையும், அதன் பின்னர்  தற்காலிக பூச்சு வேலையைப் பார்க்கும் அதிகாரிகளால் குடியிருப்புவாசிகள் தங்களின் வீட்டில் தங்கவே அச்சப்படும் சூழலை உருவாக்கியுள்ளது.

குடிசைமாற்று வாரியத்தை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் எனப் பெயர் மாற்றியதைக் கொண்டாடும் தமிழக அரசு, அக்குடியிருப்பைத் தரமாகக் கட்ட தவறிவிட்டதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் குடியிருப்பில் ஒவ்வொரு நாளும் உயிரைப் பணயம் வைத்து வாழ வேண்டிய சூழலுக்கும் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, புளியந்தோப்பில் கட்டப்பட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் இடிந்து விபத்துக்குள்ளான நிலையில், அது போல மேலும் ஒரு விபத்து நிகழும் முன்பாக பெரியார் நகர் வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பை முழுமையாக ஆய்வு செய்து அதன் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: பரிதவிக்கும் மக்கள்இடிந்து விழும் குடியிருப்புகள்Apartments that collapse within a year and a half of being built - people are suffering
ShareTweetSendShare
Previous Post

முருக பக்தர்கள் மாநாட்டுக்கு யாரும் வரமாட்டார்கள் என்ற திமுக-வின் எண்ணம் பொய்த்து போனது : நயினார் நாகேந்திரன்!

Next Post

நரிக்குறவ மக்கள் வனப்பகுதிக்கு இடமாற்றம் : தமிழக அரசுக்கு கடும் எதிர்ப்பு!

Related News

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்றுச் சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

இந்தியாவின் அதிக உள்கட்டமைப்பு முதலீடு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் – S&P குளோபல் மதிப்பீட்டு கணிப்பு!

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies